Showing posts with label திரைப்படம். Show all posts
Showing posts with label திரைப்படம். Show all posts

Friday, January 22, 2010

வித்யாபாலன்-பி.சி.ஸ்ரீராம்-இளையராஜ-பா....

நேற்று திரு.பால்கி அவர்கள் இயக்கிய ”பா” படம் பார்க்க நேர்ந்தது, மனித உணர்வுகளை நுட்பமாகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் காண்பித்து இருக்கும் படம். திரு இளையராஜா அவர்களின் இசைக்காவே இந்த படத்தை பார்க்க தேர்ந்தெடுத்தேன், மிகவும் சிறப்பாக செய்திருந்தார், கதையின் சூழலுக்கேற்பான இசை. தென்றல் காற்று உடலுக்கும் மனதுக்கும் இதம் அளித்தது என்பது போல இந்த் படத்தின் இசை.
பி.சி.ஸ்ரீராம் அவர்களின் ஒளிப்பதிவு, ஒளி அமைப்புகளிலும், காட்சி கோனங்களிலும் கதையை விட்டு தனியே தெரியாமல் கதையோடு பயனித்தே தன் வித்தையை காண்பித்திருந்தார். ஒளிப்பதிவுக்காகவே கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். அழகான பெண் ஐம்புலன்களுக்கும் நிறைவை தறுவாள்(நன்றி:காமத்து பால்,திருவள்ளுவர்) என்பது போல திரைபடம் அமைந்திருந்தது. காதல்,மருத்துவம்,பாசம், அரசியல், பாலியல், வாழ்வியல் போன்றவை நுட்பமாகவும் மனதில் பதியும் படியும் சொல்ல பட்டிருந்தன.
பழம்பெரும் நடிகர் அமிதாப் அவர்கள் மேக்கப்பையும் மீரி(தசாவதாரத்தை போல இல்லாமல்) நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அவர் மகன் அபிஷேக்கும் அவரது பணியை செவ்வனே செய்து இருந்தார். நேர்மையான அரசியல்வாதியாக இருக்க முற்சிப்பதில் உள்ள சோதனைகளும் நெருக்கடிகளையும் மிகவும் நன்றாக கையாண்டு உள்ளார்.
படத்தில் நடித்தவர்களில் எனக்கு மிகவும் பிடித்தது வித்யா பாலனின் நடிப்பு, உடலை காட்டி பிழைப்பு நடத்தும் நடிகைகள் மிகுந்த இந்த கால கட்டத்தில் முகத்திலும் உடல் மொழியிலும் நடிப்பை காண்பிக்கும் இப்படி ஒரு நடிகையா? அவர் தோன்றும் ஒவ்வொரு காட்ச்சியிலும் ஸ்கோர் செய்கிறார். காதல் ஆகட்டும், காமம் ஆகட்டும், சோகம் ஆகட்டும், மகனிடம் காட்டும் பாசமாகட்டும் ஒவ்வொரு காட்சியிலும் ஆஹா. ஆர்பாட்டம் இல்லாத மிக இயல்பான நடிப்பு, இவரை போன்ற நடிகைகளை திரை உலக படைப்பாளிகள் வீனடித்து விடக்கூடாது. இவரது நடிப்புக்காகவே இந்த படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கலாம்.
இது போன்ற நல்ல தரமான படங்களை உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறேன் திரு பால்கி.
பா............... அப்பப்பா