Monday, January 16, 2017

இளையராஜாவிடம் போய் உங்களுக்கு இசை மிகவும் பிடிக்குமா என கேட்கலாமா?




நான் அது போல கேட்டேன் ஒருவரிடம். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொழில் நிமித்தமாக என்னை அழைத்தது செல்பேசி, எதிர் முனையில் ஒரு இளைஞனின் குரல்
தன் பெயரை சொல்லி இன்னார் பரிந்துரைத்தார், இது போல ஒரு பழுது இதை சரி செய்ய வரவேண்டும் என. ஒப்புக்கொண்டு நானும் சென்றேன் அவர் இல்லம் தேடி.

அவர் இல்லம் எளிதில் கண்டுபிடிக்க இயாலாத இடத்தில் சற்று உள்ளடங்கிய இடத்தில் இருப்பாதால் வழி காட்ட அவரும் மெயின் ரோட்டிற்க்கு வந்திருந்தார், முதல் சந்திப்பு. அவ்ர் நான் எதிர்பார்த்த இருபதுகளின் இறுதில் இருக்கும் இளைஞர் இல்லை, முப்பதுகளின் நடுவில் இருப்பவர் என நினைத்துக்கொண்டேன்.

அவருடன் சென்று பழுது நீக்கும் பணியில் இருக்கும் போது கண்களில் பட்டது ஒரு சிறிய ரெப்ரிஜிரேடர் போன்ற ஒன்று அதனுள் கேமராக்களும் லென்ஸ்களும், அப்போது தான் நான் கேட்டேன்.

”சார் போட்டோகிராபி ல ரொம்ப இண்ட்ரஸ்டோ என” பதிலுக்கு அவர் சிரித்துக்கொண்டே ஆமோதித்தார்.


என் பழுது நீக்கும் பணியின் இடையே பேசும் பொழுது மெது மெதுவாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டார். ஆஹா யாரிடம் வந்து என்ன கேள்வி கேட்டோம் என ”சுர்” என உறைத்தது. நான் எதிர்பார்த்தது போல அல்லாமால் ஐம்பதை தொட இருக்கும் ஒரு இளைஞர் இவர் என உணர்ந்து கொண்டேன் .

ஒரு போட்டோ ஆல்பத்தை என்னிடம் காண்பித்தார், ஒரு குழந்தையின் பிறப்பு முதல் முதலாம் பிறந்தநாள் வரை. பார்த்து அசந்து போனேன். நான் மட்டுமா பல பிரபலங்களும் கண்டு வியந்து பாரட்டிய ஆல்பம் அது. பல முறை தேசிய விருது வாங்கிய தோட்டாதரணி வாழ்துறை வழங்கி பாரட்டிய ஆல்பம் அது.

அப்படியே பணியின் இடையே மேலும் சில படங்களை கண்டு வியந்து, புகழ்ந்து பணியை முடித்து பணமும் வாங்கி விடைபெற்றேன். இவ்வளவு இருந்தும் சற்று கராரண டெக்னீஷியனாகவே நடந்து கொண்டேன். இவ்வளவு விரிவாக சொல்லக்காரணம் அவரது எளிமை, கர்வம் கொள்ளாமை, தன்னடக்கம், மனித பண்பு.

அதன் பிறகு ஒரு சில சந்திப்புகள் மேலும் பல புரிதல்கள், வியப்புகள், அன்பின் பினைப்பாகி அவரை மனதளவில் என் சகோதரராகவே ஏற்றுக்கொண்டேன். சுமார் 30-35 ஆண்டுகளுக்கும் மேலாக ஃபிலிம்/அனாலாக் தொழில் நுட்ப்பத்தில் இருந்து தொடங்கி டிஜிட்டல் வந்தவுடன் அதையும் தன்வசப்படுத்தி தான் மட்டும் வாழாமல் எல்லோருக்கும் workshopகள் மூலம் வித்தையை பகிர்ந்து மகிழ்ந்து வாழும் மிகச்சிறந்த மாமணிதர்.

அவரை நான் அன்புடன் சொல்வது “ரகு ஸாய்”, அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வது
ஸாய் ரகு- ஸாய் ரகுநாத்.

பகிர்ந்து மகிழும் பண்போடு, தன் பணியினை வழையடி வாழையாய் தொடரும் மகள் செளமியாவுடன் நிழல் ஸ்டுடியோ வழியாக செவ்வனே செய்து மகிழ்கிறார் இந்த நிஜ மனிதர்.

https://www.facebook.com/sairaghunath.raghunath

https://www.facebook.com/NizhalPhotography/?fref=ts

https://www.facebook.com/NizhalPhotography/videos/1114667821971507/



No comments:

Post a Comment