Friday, December 31, 2010

தமிழ் செம்மொழி பூங்கா- சென்னை

நேற்று மதியம் ஒரு பனி நிமித்தமாக அண்ணா சாலைக்கு சென்ற போது சிறிது நேரம் கிடைத்து அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள செம்மொழி பூங்காவை பார்வையிட வாய்ப்பு கிடைத்தது. இரு சக்கர வாகன கட்டனமாக 5 ரூபாய் வசூலிக்கிறார்கள். பூங்கா நுழைவு கட்டனம் 5 ரூபாய். தினசரி காலை நடை பயிற்சி செய்பவர்களுக்கு பூங்கா காலை 6-8மனி வரை திறக்க படுகிறது ஆனால் இதற்கு மாதன் 150 ரூபாய் கட்டனம் செலுத்தி மாதந்திர நுழைவு சீட்டு வங்கிக்கொள்ள வேண்டும்.

இது வேற!
நுழைவு சீட்டு வாங்கும் இடம்
மிகவும் மக்கள் நெருக்கடியும் வாகன போக்குவரத்தும் உள்ள சென்னை நகரின் இதயப்பகுதி போன்ற அண்ணா மேம்பால பகுதியில் இது போல இயற்கை சூழலுடன் கூடிய மூலிகை தோட்டம் இருப்பது மிகவும் மகிழ்சியான விஷயம்.
செம்மொழி பூங்கா அலுவலகம்
உள்ளே சிறுவர் சிறூமியர் விளையாட ஊஞ்சல் சறுக்கு மரம் போன்றவை
பொறுத்தப்பட்டுள்ளன, வந்திருந்த குழந்தைகள் அனைவரும் மிகவும் மகிழ்சியோடு விளையாடிக் கொண்டிருந்தனர்.
அழகிய குப்பைத்தொட்டியும் ஈரமான நாற்காலியும்
செடிகள் காய்ந்து விடாமல் இருக்க குறிப்பிட்ட கால இடைவேளைகளில்
தண்ணீர் Sprinkle செய்யபடுகிறது, இதனால் செடிகள் பசுமையாகவே பரமரிக்க படுகின்றன தூசும் மாசும் படியாமல். பூங்காவின் நடுப்பகுதியில்ஒரு நறுமனத் தோட்டம் அமைக்க பட்டு நறுமணம் வீசும் மலர்செடிகளும் மூலிகை செடிகளும் உள்ளன.

வாத்து குளத்தை சுத்தம் செய்யும் பனியாளர்கள்

கூரிய அல்லி
பல்வேறு வகையான மூலிகை செடிகள் இங்கே பயிரிடப்பட்டு இருக்கின்றன
ஒரு சில நமக்கு அறிமுகமான செடிகளும் உள்ளன. ஆங்காங்கே நீர் நிலைகள் அமைக்கப்பட்டு அவற்றில் வாத்து கூட்டங்களை நீந்த விட்டு இருப்பது அழகு.




தொங்கும் தோட்டம்?
பூங்கா நடுவிலிருந்து தெரியும் ராணி சீதை மன்றம்

அண்ணா மேம்பாலம் பூங்கவிலுருந்து
வந்து போகும் மக்களின் வசதிக்காக பூங்காவின் ஒரு ஓரத்தில் கழிவறைகளும் அமைக்க பட்டுள்ளன, இதையும் நன்றாகவே பரமரிக்கின்றனர். பூங்காவை இதே போல தொடர்ந்து பராமரித்து வந்தால் சென்னையின் தவிர்க்க முடியாத சுற்றுலா தலமாகிய கடற்கரை போலவே இதுவும் விளங்கும்.



Sterling Tower பின்னனியில்

பூவில் வண்டு? இல்லை இது ஈ

நறுமன தோட்ட வாயில்
சிறுவர்கள் விளையாட்டு
போன்ஸாய் மரங்கள்

பூங்காவில் நான்

சென்னை வாழ் மக்களும் சென்னைக்கு வருபவர்களும் கண்டிப்பாக வந்து
மகிழ வேண்டிய இடம் இந்த செம்மொழி பூங்கா.

wikipedia link தமிழில்.
படங்கள் நன்றி: திரு நவநீத கண்ணன்.

8 comments:

Navaneetha Kannan said...

It's a nice experience to visit the park in singara chennai. I enjoyed a lot...

Anand said...

Super and very detailed explanation in tamil. It seems like we have been to the park sitting in front of the computer

Krubhakaran said...

கருத்து பதிவுக்கு நன்றி ஆனந்த். கேமரா கண்ணனின் கை வண்ணத்திற்கும்.

Unknown said...

nice presentation. could you give more details about the park. Is it larger than Bangalore garden!

Krubhakaran said...

Thanks Suresh for the Comments, wikipedia link is included in the end of the article for more details, check it.

Karthik said...

Munnadi Woodlands hotel irunda edam ! Kichdiyum, Dosa Coffee lam Sooper aa irukum, adhuvum pasumayamana suzhal la Heart of the City La !

Enna Karanathalo Kaanama poi ippo Semmozhi Poonga vandurukku ! Innoru Concrete kaadu varama Pasaumai maranga vandadu great !

Poongavum, Semmozhikum enna sammandham nu thrila !

Nalla maintain panra enda oru vishayathayum, makkal aadharikara thayarngardu namakku thrinja vishayam thane ! Eg. Sathyam Complex ! Ingayo verum Rs.5 ku entrance na evvalavu nalla vishayam !

City la Pollution a kuraikardukkum, oru chinna relaxation kum romba useful a irukum !

Innum inda madiri oru park therandu irukanganu City irukara neraya peruku theriyadu ! Adha inda Blog ppathu therinjikalam. Neraya vishayam solliruku inda blog, adhuvum nalla quality padangolada.

City la innum neraya inda madiri open pannanum ! Namma ellam Govt. in inda muyarchiya aadharippom !

Krubhakaran said...

கருத்தளித்தமைக்கு நன்றி கார்திக். Woodlands ஹோட்டல் சரியான உரிமம் இன்றி நடந்து வந்ததாக தகவல். பூங்காவுக்கும் செம்மொழிக்கும் என்ன சம்பந்தம் என்பதை முதல்வர் தான் சொல்ல வேண்டும். இது நாள் வரை நன்றாகவே பராமரிக்க படுகிறது, திறந்து சுமார் ஒரு மாத காலமே ஆகின்ற காரனத்தால். தியாகராய நகர் பனகல் பார்க், லஸ் நாகேஸ்வரா பார்க் எல்லாமும் இது போல பரமரிக்க படிகின்றன என நினைக்கிறேன். நகரம் முழுதும் இது போன்ற பூங்காக்கள் இருந்தால் சிறப்பாகவே இருக்கும்.

Sukumar said...

சூப்பர் பாஸ்.. அருமையான புகைப்படங்கள்.. நல்ல பதிவு....

Post a Comment