இசை, இதற்கு இசையாத மனிதர்கள் வெகு சிலரே, முகலாய மன்னன் ஒளரங்கசிப்புக்கு இசை பிடிக்காத விஷயம் என கேள்விபட்டிருக்கிறேன், இது போல வெகு சிலர் இன்றும் இருக்கக்கூடும். ஆனால் இசைக்கு வசமாகாத உயிர்களே கிடையாது என சொல்லக்ககூடிய அளவுக்கு எல்லோருக்கும் இசை பிடிக்கும். நாம் இன்றையகாலகட்டத்தில் இசை என பெரும்பாலும் கேட்பது சினிமா பாடல்களையே.
அந்த சினிமா பாடல்களையும் பல்வேறு செவ்வியல் இசை வடிவங்களை சினிமா பாடல்களில் கலந்து நமக்கு சுவைபட பரிமாரிய பல்வேறு இசை வித்தகர்களை எனக்கு மிகவும் பிடித்தவர் ”இசைஞானி ” என்ற பட்டத்துடன்(உன்மையான தகுதியுடன்) போற்றப்படும் இளையராஜா அவர்கள். இவரை பற்றி எழுதவேண்டும் என்றால் 2000-3000 பக்கங்கள் எழுதலாம், அவ்வளவு அருமையான இசை படைப்புகள் நமக்கு அளித்துள்ளார்.
இவரது புதல்வர் கார்திக்ராஜா அவர்கள், தன்னை தன் தந்தை இளையராஜா என்னும் ஆலமரத்தின் நிழலில் இருத்திக்கொண்டிருப்பதால், அவரது முழுத்திறமையை வெளி உலகம் அறியாமல் இருக்கிறது. அவ்வப்போது இவரது இசையில் வெளிவரும் சினிமாக்களும் பெரும் வியாபார வெற்றி பெறாமல் போனதால், நிறைய பட வாய்புகளும் அவருக்கு இல்லாமல் போனது. ஏறக்குறைய 14 ஆண்டுகளாக இசை அமைத்து கொண்டிருந்தாலும் அவருக்கு கிடைத்த வாய்புகளும் புகழும் குறைவே.
அவர் தனி இசையமைப்பாளராக இசையமைக்க ஆரம்பித்த காலத்தில் வந்த படங்களின் பாடல்களில் இருந்து சமீபத்தில் வெளி வந்திருக்கும் ரெட்டைச்சுழி படப்பாடல்கள் வரை அவரது இசையில் ஒரு தனி முத்திரை இருக்கும். அலெக்சாண்டர் படத்தில் “நதியோரம் வீசும் தென்றல்”, மாணிக்கம் படத்தில் ”தூது செல்லு இளம்” ,”உனக்கென ராசா” எனக்கொரு மகன் பிறப்பான் படத்தில் “சம் சம் சம் பூ மஞ்சம்”(இதே பாடல் பின்னாளில் ஹிந்தியிலும் GRAHAN படத்தில் புது வடிவம் பெற்றது).
உல்லாசம் பட பாடல்கள் அனைவரும் அறிந்ததே, குறிப்பாக படத்தில் வரும் ஒரு குறும் பாடல் ”இளவேனில் தாலாட்டும்” மிகவும் அருமையான பாடல், கர்நாடக இசை சாயலும், மேற்கத்திய இசையும் கலந்து தன்னுடைய முத்திரையாய் ஒரு சில ஜாலங்கள் செய்து, ஒரு அற்புதத்தை படைத்திருப்பார், குறிப்பாக ஒரு புல்லாங்க்குழல் இசை பாடல் முழுதும் பயணிக்கும். Heavenly bit.
அவரது பல்வேறு நல்ல பாடல்களை பற்றி பிறகு ஒரு பதிவு போடுகிறேன், இப்பொழுது அவரது சமீபத்திய படப்பான ரெட்டைச்சுழி பட பாடல்களை பற்றி:-
இயக்குனர் சங்கர் தயாரிப்பில், தாமிரா இயக்கத்தில், பாரதிராஜா, பாலச்சந்தர் ஆகிய ஜாம்பவான்கள் நடிப்பில் உருவாகிவரும் படம், எனவே இசை குறித்த பெரும் எதிர்பார்ப்பும் இருந்தது, அதை நிறைவாகவே செய்திருக்கிறார் கார்த்திக்ராஜா.
1) பம் பம் பம்பர காத்து:- பழனிபாரதி எழுதி, வயலின் பத்மா,ரீட்டா,குழுவினர் பாடிய பாடல். பாடலின் ஆரம்பமே கார்திக்ராஜாவின் trademark தாளத்துடன் தெடங்கி மெது மெதுவெ நம்மை மயக்குகிறது. தனது சேர்ந்திசை(chorus) ஜாலத்தையும் நடு நடுவே தூவி தாலாட்டுகிறார்.
2)பட்டளம் பாருடா:- வே.ராமசாமி எழுதி, அர்மான்மாலிக், சர்வான்,V.S.K.பவுசியா மற்றும் பத்மாசேஷாத்ரி பள்ளி குழந்தைகள் பாடியது. குழந்தைகள் சேர்ந்திசையில் ஆரம்பிக்கிறது. அடித்து ஆடியிருக்கிரார் கார்த்திக் இந்த பாடலில். பல்வேறு வகையான தாளங்களில் அடி பின்னி எடுத்திருக்கிறார். நடு நடுவே trumpet வேறு புகுந்து விளையாடுகிறது.
3) நான் என்று சொல்:- சந்திரா எழுத்தில், ஹரிஹரன்,ஹரிசரன், ஸ்ரீராம் பார்த்தசாரதி மூவரும் ஜீவனூட்டியுள்ள பாடல், இதே பாடல் ஹரிஹரன் குரல் மட்டும் கொண்டு இன்னொரு முறையும் வருகிறது. சற்றே தன் தந்தையின் சாயலில் மெட்டமைத்துள்ளார் கார்த்திக், இசையமைப்பில் தன் தனி முத்திரையையும் பதித்து இருக்கிறார். சோக பாடலாக இருப்பதால் மக்களை கவரும் வாய்புகள் குறைவே.
4) பூச்சாண்டி கண்ணழகி:- அண்ணாமலை எழுதி, பெல்லி ராஜ், ரீட்டா குரல்களில், இந்த பாடல் கார்த்திராஜ Special என்றே சொல்லலாம், சராசரி குத்து பாடலாக இல்லாமல் இசையமைப்பில் பல்வேறு வேறுபாடுகள் காட்டி, தாளம் போட்டு ரசிக்க வைக்கிறார், வித்தியாசமான சத்தங்களில் இசை அடித்து விளையாடுகிறது. இதே பாடல் ஹரிஹரன், ஷ்ரேயா கோஷல் குரல்களிலும் வருகிரது, இவர்களின் குரலில் இந்த பாடல் சற்றே தூக்கலான உற்சாகத்தில் உள்ளது. ஹரியும் ஷ்ரேயாவும் கலக்கி இருக்கிறார்கள்.
5) பற பற கிளி:- பழனி பாரதி எழுதி, ராகுல் நம்பியார், தீப மரியம் பாடியது. அனேகமாக கேட்க்கும் எல்லோரும் தனக்கு மிகவும் பிடித்த பாடலாக ஹம் செய்யக்கூடிய பாடல். பாடலின் இடை இசையில் கார்திக்கின் மாயாஜாலம், Strings, rhythms, bells என கலக்கிவிட்டார், மனதை வருடி தாலாட்டும் excellent மெலடி. இந்த பாடல் instrumental version இருந்தால் அது ஒரு musical ecstasy யாக இருக்கும்.
Well done Karthik. Great job after a quite long time. சமீபத்தில் ஒரே படத்தில் அனைத்து பாடல்களும் சிறப்பாக உங்களுக்கு அமைந்து வெகுநாட்கள் ஆனது, அதை நிறைவு செய்யும் வகையில் ரெட்டைச்சுழி அமைந்துள்ளது.
வாழ்துகள்.
Thursday, March 25, 2010
Monday, March 8, 2010
யார் சந்நியாசி - கமல்,இளையராஜா விளக்கம்
சமீபமாக பரபரப்பாக பேசப்படும் போலிச்சாமியார் விவகாரம் எல்லோரும் அறிந்ததே. இதே போல பல போலிச்சாமியார்கள் முன்பும் இருந்ததுன்டு, 90களில் பிரபலமான ப்ரேமானந்தன், சில வருடங்கள் முன் வெங்கடேச சதிர்வேதி, ஜெயேந்திரன்,விஜயேந்திரன், இப்போது நித்யானந்தன். பலரால் கடவுளாகவே வணங்கப்படும் புட்டபர்த்தி சாமியார் பற்றி கூட பாலியல் குற்றச்சாட்டு உன்டு.
தற்போது பிரபலமாக இருக்கும் ஜக்கி வாசுதேவை பற்றி கூட சுமார் 10-12 வருடங்களுக்கு முன் “கர்நாடகத்தை சேர்ந்த பிரபல சாமியார் மனைவியின் கொலை வழக்கில் விசாரனை” என சன் செய்திகளில் கேட்டதாக நினைவு. தன் மனைவியையே கொன்று விட்டதாக வழக்கு, ஆனால் அவர் தன் மனைவிக்கு மோட்ட்சம் அளித்ததாக வழக்கு முடிக்க பட்டதாக நினைவு, ஆனால் நம் மக்கள் எல்லவற்றையும் மறந்து ஆடு மாடு மந்தைகள் போல இவர்கள் பின்னால் தான் போகிறார்கள்.
வெங்கடேச சதுர்வேதியை பற்றி பத்திரிக்கைகளில் வராத செய்தியே இல்லை, அன்றைய முதல்வர் ஜெயலலிதா இவன் செய்த அட்டூழியங்களை கேட்டு உடணடியாக கடும் நடவடிக்கை எடுக்க சொல்லி உத்தரவிட்டதால படித்த ஞாபகம். பெண்களுக்கு அவ்வளவு கொடுமைகள் செய்துள்ளான். ஆனால் அதே சதுர்வேதி சமிபத்தில் ஒருசொற்பொழிவு ஆற்றி இருக்கிறார் அந்தவிழாவில் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் கலந்து கொண்டிருக்கிறார், இதோ அதற்கான வீடியோ சுட்டி:- http://www.chennaionline.com/video/index.aspx?vid=1866&Title=Chaturvedi%20Swamigal%20at%20Potramarai%20-%20Part%20I&Page=0 இந்த கொடுமையை என்ன சொல்வது?
ஜெயேந்திரன், விஜயேந்திரன் விவகாரம் ஊர்றறிந்தது, நக்கீரன் பத்திரிக்கை “சுகண்யா நேக்கு, சொர்ணமால்யா நோக்கு” என ஜெயேந்திரன் சொன்னதாக வெளியிட்ட ஞாபகம், ரவி சுப்பிரமணியம் என்பவன் சங்கர மடடத்தின் சகலத்தையும் ”பிட்டு பிட்டு” நக்கீரனில் எழுதி இருவரும் காசு பார்த்தனர். இது போல எல்லா மதங்களிலும் எல்ல தகிடு தத்தமும் நடந்து கொண்டுதான் உள்ளது மக்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும். எவன் ஒருவன் தன்னை முன்னிலைப் படுத்தி விளம்பரம் செய்து கடவுள் வியாபாரம் செய்கிறானோ அவனிடம் அனைவரும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். கடவுளுக்கும் பக்தனுக்கும் இடையே BROKER எதற்கு?
திரு. கமல்ஹாசன் நடித்த வசூல்ராஜ MBBS படத்தில் ஒரு வசனம் : “கடவுள் இல்லனு சொல்றான் பார் அவன நம்பலாம், கடவுள் இருக்கார்னு சொல்றான் பார், அவன கூட நம்பிட்லாம், ஆனா, நான் தான் கடவுள்னு சொல்றாம் பார் அவன மட்டும் நம்பவே கூடாது, பூட்டகேசாயிடுவ” .
இனி இளையராஜா சொல்வதை கேளுங்கள்
தற்போது பிரபலமாக இருக்கும் ஜக்கி வாசுதேவை பற்றி கூட சுமார் 10-12 வருடங்களுக்கு முன் “கர்நாடகத்தை சேர்ந்த பிரபல சாமியார் மனைவியின் கொலை வழக்கில் விசாரனை” என சன் செய்திகளில் கேட்டதாக நினைவு. தன் மனைவியையே கொன்று விட்டதாக வழக்கு, ஆனால் அவர் தன் மனைவிக்கு மோட்ட்சம் அளித்ததாக வழக்கு முடிக்க பட்டதாக நினைவு, ஆனால் நம் மக்கள் எல்லவற்றையும் மறந்து ஆடு மாடு மந்தைகள் போல இவர்கள் பின்னால் தான் போகிறார்கள்.
வெங்கடேச சதுர்வேதியை பற்றி பத்திரிக்கைகளில் வராத செய்தியே இல்லை, அன்றைய முதல்வர் ஜெயலலிதா இவன் செய்த அட்டூழியங்களை கேட்டு உடணடியாக கடும் நடவடிக்கை எடுக்க சொல்லி உத்தரவிட்டதால படித்த ஞாபகம். பெண்களுக்கு அவ்வளவு கொடுமைகள் செய்துள்ளான். ஆனால் அதே சதுர்வேதி சமிபத்தில் ஒருசொற்பொழிவு ஆற்றி இருக்கிறார் அந்தவிழாவில் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் கலந்து கொண்டிருக்கிறார், இதோ அதற்கான வீடியோ சுட்டி:- http://www.chennaionline.com/video/index.aspx?vid=1866&Title=Chaturvedi%20Swamigal%20at%20Potramarai%20-%20Part%20I&Page=0 இந்த கொடுமையை என்ன சொல்வது?
ஜெயேந்திரன், விஜயேந்திரன் விவகாரம் ஊர்றறிந்தது, நக்கீரன் பத்திரிக்கை “சுகண்யா நேக்கு, சொர்ணமால்யா நோக்கு” என ஜெயேந்திரன் சொன்னதாக வெளியிட்ட ஞாபகம், ரவி சுப்பிரமணியம் என்பவன் சங்கர மடடத்தின் சகலத்தையும் ”பிட்டு பிட்டு” நக்கீரனில் எழுதி இருவரும் காசு பார்த்தனர். இது போல எல்லா மதங்களிலும் எல்ல தகிடு தத்தமும் நடந்து கொண்டுதான் உள்ளது மக்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும். எவன் ஒருவன் தன்னை முன்னிலைப் படுத்தி விளம்பரம் செய்து கடவுள் வியாபாரம் செய்கிறானோ அவனிடம் அனைவரும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். கடவுளுக்கும் பக்தனுக்கும் இடையே BROKER எதற்கு?
திரு. கமல்ஹாசன் நடித்த வசூல்ராஜ MBBS படத்தில் ஒரு வசனம் : “கடவுள் இல்லனு சொல்றான் பார் அவன நம்பலாம், கடவுள் இருக்கார்னு சொல்றான் பார், அவன கூட நம்பிட்லாம், ஆனா, நான் தான் கடவுள்னு சொல்றாம் பார் அவன மட்டும் நம்பவே கூடாது, பூட்டகேசாயிடுவ” .
இனி இளையராஜா சொல்வதை கேளுங்கள்
Saturday, March 6, 2010
Subscribe to:
Posts
(Atom)