Wednesday, December 28, 2016

வர்தா புயலும் வாழ்க்கையும் Part One

வர்தா புயலும் வாழ்க்கையும்

Part One


இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.

2016 டிசம்பர் 12 திங்கட்கிழமை, கார்திகை தீபம். வர்தா புயல் என எதிர்பார்த்துகொண்டிருந்த நேரம் காலை மணி 8. வெளிச்சம் இருந்ததே தவிர ஆதவனை காணவில்லை, ஓய்வரியா சூரியன் ஓய்வெடுக்க சென்றானோ என என்ன தோன்றும் படி இருந்தது சூழ்னிலை.  தமிழக மின் வாரியம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் வினியோகத்தை நிறுத்தியது.

தமிழ்நாடு வானிலை மனிதர் “ப்ரதீப் ஜான்” பெரிய அளவில் எச்சரிக்கை கொடுத்திருந்தாலும் மனித மனம் அலட்சிய போக்கில் இன்வர்ட்டரையிம் மற்ற மின்கல சாதனங்களையும் வழக்கம் போல பயண்படுத்த பணித்தது. இவ்வேளையில் படிப்படியாக காற்றின் வேகம் சீற்றமாக மாற தொடங்கியது. காலை 11 மணியளவில் காற்றின் வேகத்தில் ஆடிய மரங்களின் கிளைகள் முறிய தொடங்கின, முறிந்த கிளைகளில் ஒன்று BSNL தொலை தொடர்பு ஒயரை துண்டித்தது.

நேரம் போக போக காற்றும் மழையும் சீற்றம் கூடிக்கொண்டே இருந்தது, இயற்கை மனித மன அழுக்குகளை அடித்து துவைக்க ஆரம்பித்திருந்தது . தெண்னை மரங்கள் வளைந்து நெளிந்து பேய் பிடித்தது போல் ஆடின. மா, வேம்பு போன்ற பாரம்பரிய மரங்கள் தங்கள் கிளைகளை காற்றுக்கு காவு கொடுத்தன. சாலையோரங்களில் நிழலுக்கும் அழகுக்கும் வளர்க்கப்பட்ட குல்மொஹர் போன்ற அதிக வேர்பிடிப்பில்லா மரங்கள் நெடுஞ்சான் கிடையாக விழுந்து தங்களையே பலியாக தந்தன காற்றுக்கு.

மதியம் சுமார் 1.30-2.00 மனியளவில் உச்சத்தை எட்டினான் வாயு தேவன். தென்னம் ஓலைகளும் பாளைகளும் ஏன் இளனீகளையும் கூட பறக்க விட்டு விளையாடினான். மாடி வீடுகளில்  வேயப்பட்டிருந்த கூறைகள், டின் ஷீட் ஷெட்கள், சிண்டெக்ஸ் டாங்குகள் இயற்கைக்கு ஈடு கொடுக்க முடியாமல் தோற்றன. இயற்கை மனிதனுக்கு இன்னும் ஒருமுறை பாடம் எடுத்துக்கொண்டிருதது. தன் வாழ்நாளில் இதுவரை கானாத காற்றை/சீற்றத்தை மனிதன் பார்த்தான்.

மாலை 4 மெதுவாக தன் வேகத்தை மட்டுப்படுத்த ஆரம்பித்த காற்று சற்று நேரத்திற்கெல்லம் அமைதியானது. சுமார் 5 மனி வரை புயலுக்கு பின் அமைதி தோற்றம். பயந்து பதுங்கி இருந்த உயிர்கள் எல்லாம் வெளியே தலையை நீட்டின. பெரும்பாலான மாடிகள் நீச்சல் குளங்கள் போல காட்சியளித்தன, காற்றில் அடித்து வந்த குப்பைகள் நீர்வடிகால்களை அடைத்து மழை நீரை மாடிகளில் குளம் போல் தேங்கச்செய்தன. மெதுவாக அவற்றை நீக்கி நீரை மழைனீர் சேகரிப்பு அமைப்புக்கு செல்ல வழிவகுத்தேன்.

மீண்டும் 5 மணிக்கு மேல் காற்று சற்று வேகம் கூடியது. இருளும் கூட தொடங்கியது. அன்று கார்திகை தீபம் என்பதை மறந்தே போனார்கள் பலரும். இவ்வளவு ரனகளத்திலும் என் தாயார் அன்று மாலை வழிபாட்டுக்கான தயாரிப்புகளை செய்து கொண்டிருந்தார். அவல் பொறி உருண்டை, வெல்ல அப்பம், வடை செய்ய மாவு அரைக்க மின்சாரம் இல்லாததால் அரிசி மாவு(dry) தட்டை.  சாதாம், சாம்பார், பீண்ஸ் பொரியல், வாழைக்காய் வருவல், ரசம் இவையெல்லம் இறைவனுக்கு படைக்கப்பட்டு சூடாக சுவையாக எங்கள் வாயில் ருசித்து வயிற்றில் இறங்கின. உன்மையான கார்திகை தீபமாக அகல் விளக்குகளால் வீடு ஒளிர்ந்தது.

 மனிதர்கள் வழக்கம் போலா இன்வர்டரை பயன்படித்தி ஒளி ஏற்படுத்திக்கொண்டார்கள்.  எச்சரிக்கை உணர்வுடன் என் வீட்டில் நான் ஒரெ ஒரு எல்.ஈ.டி விளைக்கை மட்டும் பயன் படுத்துமாறு அறிவுறுத்தினேன். நல்ல வேளையாக வாட்டர் டேங்கிலும் தண்னீர் நிறைந்தே இருந்தது.

தீப வழிபாடு முடித்து, உணவை சுவைத்து, உறக்கத்துக்கும் சென்றோம்.


end of part One






No comments:

Post a Comment