
சமீபத்தில் திரு இளையராஜா அவர்கள் ”அகி”(www.agimusic.com/Agi_Music/Agi_Music.html)இசை நிறுவத்திற்கு தான் 2000ம் ஆண்டிற்கு முன்னதாக இசைஅமைத்த பாடல்கள் இசை தொகுப்புகள் ஆகியவற்றிற்கான உரிமையை தந்திருப்பதாக அறிவித்திருந்தார். நம்மில் பலர் திரு.ராஜாவின் பாடல்களை விரும்பி கேட்க்கிறோம், பெரும்பாலானோர் இனையத்தில் இருந்து தான் டவுன்லோட் செய்து கேட்கிறோம்.திரு இளையராஜா அவர்களின் இசை தொகுப்புகள் பெரும்பான்மையும் இனையத்தில் இலவசமாக கிடைப்பதால் என் போன்ற நல் இசை விரும்பிகள் அவற்றை இனையத்தில் இருந்தே டவுன்லோட் செய்து கொள்கிறோம். இவற்றில் பல நேரம் ஒலி அமைப்பு நல்ல தரத்தில் இல்லாமல் இருந்தாலும் ராஜாவின் இசை மீது உள்ள காதலால் இவற்றையே கேட்க்க வேண்டி இருக்கிறது.
திரு ராஜா அவர்களின் இசை ஒப்பந்ததை கேள்வியுற்று ”அகி” யின் தளத்திற்க்கு சென்று இசை தொகுப்புகள் என்ன இருக்கின்றன என பார்க்க சென்றபோது சில பழைய பாடல்கள்களின் sampleகள் தரப்பட்டிருந்தன. டவுன்லோட் செய்து கேட்ட போது ஒலி தரம் இல்லாத்தாகவே இருந்தது. ரசிகர்கள் பணம் கொடுத்தும் ஒலி தரமில்லாதா பாடல்களையே கேட்க வேண்டியதாக உள்ளது. அகி நிறுவனம் கண்டிப்பாக பெரும் பணம் கொடுத்தே உரிமையை வாங்கி இருக்கும் என என்னுகிறேன்.
இன்று தொழில் நுட்பம் எவ்வளவோ முன்னேரி இருக்கிறது, என்னென்னவோ மென் பொருட்க்கள் வந்துள்ளன ஒலி மேம்பாட்டிற்காக, இன்றைய சூழலில் consumer deserves quality for the money he spends, என் வேண்டுகோள் அகி நிறுவனம் ராஜாவின் பொற்கால இசை பாடல்களை, ஒசை தொகுப்புகளை Digital remaster செய்து ஒலி மேம்படுத்தி விற்பனை செய்ய வேண்டும் என்பதே. Original CD வாங்கி கேட்ப்பவர்கள் கண்டிப்பாக வாங்கி கேட்பார்கள், என் போன்றோரிடமும் Original CD வாங்க வேண்டும் என்ற என்னமும் வரும்.
ராஜாவின் பழைய பாடல்களை ஒலி மேம்படுத்துதல் சாத்தியமே என்பதற்க்காக இனையத்தில் கிடைக்கும் சில இலவச மென்பொருட்களை கொண்டு சோதனை முயற்ச்சியாக சில பாடல்களை ஒலி மேம்படுத்தியுள்ளேன் கீழ் காணும் தளம் சென்று டவுன்லோட் செய்து கேட்டுவிட்டு கருத்து சொல்லுங்கள் (www.mediafire.com/?sharekey=72e83c5d7e9ce7fe0c814df2efeadc501b072273bf6c0a61935cbde7375ca78c)
இனி விருதுகள்:-
சென்ற ஆண்டிற்கான சிறந்த படங்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்க பட்டுள்ளன, நான் கடவுள் படத்திற்கு திரு.பால சிறந்த இயக்குனராகவும், வாரணம் ஆயிரம் படம் சிறந்த படமாகவும் தேர்தெடுக்க பட்டுள்ளன. முதலில் நான் கடவுள், வழக்கத்தில் இருந்து மாறுபட்ட படங்களையே எடுக்கும் பாலாவின் படைப்பு, பாலாவின் மீதும் மேலும் படத்தின் தலைபின் மீதும் கொண்டிருந்த எதிர் பார்ப்பில் முதல் நாளே சத்தியம் திரை அரங்கில் சென்று பார்த்த படம், படம் பார்த்த பின் எனக்கு தோன்றியது இது முழுமையான படப்பு அல்ல,ஆங்காங்கே வெட்டப்பட்டு இருப்பதாக தோன்றியது, காரனம் படதிற்கு தயாரிப்பில் இருகும் போதே அவர்கள் செய்த செய்தி விளம்பரங்கள். என்னை பொருத்தவரை திரையில் காண்பிக்க பட்ட படம் அரைவேக்காடு. அரைவேக்காட்டிற்கே சிறந்த இயக்குனர் விருது என்றால்?!!!!!!!!!!!!
கெளதம்,கெளதம் மேனன், கெளதம் வாசுதேவ் மேனன் என பரினாம வளர்ச்சி பெற்ற ஒரு இயக்குனரின் படைப்பு, அவருக்கு அவரது தந்தையின் மேல் மிகுந்த பிரியம், அவரது மரணத்திற்கு பிறகு அவரது வாழ்கையை திரையில் படமாக்க என்னி அவசரகோலத்தில் சமைத்த அரைவேக்காட்டு படம்(படத்தில் சில நல்ல விஷயங்கள் இருந்தும்). இயக்குனர் இன்னும் ஓர் 5 ஆண்டுகள் தன் தந்தையின் வாழ்கையை மனதில் அசை போட்டு பிறகு திரைப்படமாக எடுத்திருந்தால் மிகவும் அருமையான திரை காவியாமக வந்திருக்கும். நம் தமிழகத்தின் தலை விதி இது தான் சிறந்த படமாம்.
இன்னொரு செய்தி படித்தேன், முனைவர் பட்டத்தின் மரியாதையை கெடுத்தது போதாதென்று பத்மஸ்ரீ பட்டம் வேறாம், நடிகர் விஜய் அவர்களுக்கு. இதெல்லாம் கேலிக்கூத்தில்லாமல் வேறென்னவாம்.
அனைவருக்கும் குடியரசு திருநாள் வாழ்துகள்.ஜெய் ஹிந்த்.
சற்று முன்(மாலை 4 மணி) கிடைத்த தகவல் ஒன்று, நான் கடவுளுக்கு கிடைத்த 2 வது விருது திரு மூர்த்தி அவர்களுக்கு தரப்பட்டுள்ளது சிறந்த்த ஒப்பனை கலைஞர் என்று, படத்தில் பணியாற்றிய நன்பர் ஒருவர் சொன்னார் திரு மூர்த்தி அவர்கள் Costumer என்று. இப்போது சொல்லுங்கள் கேலிக்கூத்து தானே?